Monday 7 September 2015

முதல் காதல்...

எல்லைகள்  நிர்நியிக்க   முடியாத
        திசைகளை   கடந்த   காற்றாய்  உலாவினேன்
உன்  விழிகளில்  விழும்  வரை ...

விழிகள்   பேசத்  தொடங்கின
       சிந்தை  தன்  சுயத்தை  இழந்தது
'நான்'  'நீ'  ஆனேன் ...

இரு   இதயம்   பினைந்தது
       நிகழ்காலம்  வசந்தமானது !
எதிர்காலம்   சொப்பனமானது !

உனக்காக  உருகினேன்
            என்னை  உணர  தவறினேன்
'காதல்'  என்ற  ஓநாய்க்கு
            என்  கணவை  இரையாக்கினேன் !

நாட்கள்  கடந்தன 
         பூந்தோட்டமாய்  இருந்த  நினைவுகள்
முட்படுக்கை   ஆனது ...

காலத்தை  பின்  செலுத்தமுடியாமல் ...
      தொலைந்துபோன  கணவை மீட்கமுடியாமல் ...
முதற்காதலை   மறக்க  முடியாமல் ...
         இதயத்தின்   வலிகளை  வாழ்கையின்  வடுக்களாய்   ஏற்று   நிற்கிறேன் !!!


No comments:

Post a Comment