Monday 23 February 2015

சுதந்திரம்...!!!



படர்ந்து கிடக்கும் நீல வானின் கீழ்
தான் யார் என்பதை மறந்து
இரும்பு கம்பிகளினுள் தன் கணவுகளை புதைத்து
படபடக்க வேண்டிய சிறகினுள் தன் ஆசையை மறைத்து
சுயநலம் பிடித்த மக்களின் கைப்பாவையாய்
தன் பிறவியின் நோக்கத்தை துலைத்து
அறியாமையில் அவர்களின் கைப்பாவையாய் இருக்கும் கிளியே!
பிறர் வந்து வாங்கிக் கொடுக்க அது பழம் அல்ல...சுதந்திரம்!
விழித்துக்கொள் கிளியே! நீ பாதுகாப்பாய் அல்ல சிறைபட்டு இருக்கிறாய்.!

No comments:

Post a Comment